போபால், ஜூலை 18- மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மகா ராஷ்டிர மாநிலம் புனே வுக்கு திங்களன்று காலை பேருந்து சென்று கொண்டு இருந்தது. 50-க்கும் மேற் பட்டோர் இதில் பயணம் செய்தனர். இந்நிலையில், தார் மாவட்டம் கல்கோட்டில் உள்ள நர்மதை ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டி ருந்த போது, இந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 100 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. இதில், 13 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர் களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 15 பேர் உட னடியாக உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். எஞ்சியவர் களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.